Wednesday, January 30, 2008

வேத வியாசர்..




மனிதன் மன நிறைவுடன் வாழ வழிகாட்டுவது வேதங்கள். உலகில் உள்ள கலைகள் எல்லாம் வேதத்தில் அடக்கம். அப்படி சிறப்பான வேதத்தை காத்து நமக்களித்தவர் வேத வியாசர். தெய்வத்தை நம்பி தெய்வ பலத்தால் வாழ்க்கை கடைத்தேற வழி காண்பித்தவர் வியாசர். மஹா பாரதத்தை நமக்கு அளித்தவர்.
தக்ஷிணா மூர்த்தியை ஆதி குரு என்கிறோம். வியாசரோ விஷ்ணு அம்சம், இதுதான் "வியாசாய விஷ்ணு ரூபாய: வியாச ரூபாய விஷ்ணவே". இவரை இந்து மதத்தின் எல்லா பிரிவுகளும் ஆதி குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்தான் நமக்கு வேதங்களை பிரித்து தந்தவர். இவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஆகியோர் மிக அழகாக பாஷ்யம் பண்ணி தங்களது மத கோட்பாடுகளை நிறுவிச் சென்றுள்ளனர்.


குரு என்று சொல்லும் போது நாம் தக்ஷிணா மூர்த்தியிலிருந்து ஆரம்பிப்பது கிடையாது. ஸ்ரீமன் நாராயணனை முதலாக கொண்டே எல்லா குரு பரம்பரையும் ஆரம்பிப்பதை காணலாம். அப்படி வருகையில் இரண்டாவதாக வருவதே வியாசர். இன்றும் இந்தியாவில் இருக்கும் எல்லா சன்யாசிகளும் தமது சாதுர் மாஸ்ய விரத சங்கல்பத்தில் வியாசரை முன்னிறுத்தி அவரிலிருந்து தமது குரு வரையில் இருப்பவர்களை பூஜிப்பத்தை பார்த்திருக்கலாம். இப்படியாக பெயர் பெற்ற குரு வியாசரை மனதில் நினைத்து இந்த பதிவினை தொடங்குகிறோம்.


பி.கு: இந்த வலைப்பூ எந்த ஒரு குறிப்பிட்ட ஆச்சார்ய பரம்பரையை மட்டும் சார்ந்ததாக இருக்காது. இந்துமததின் எல்லா குருமார்கள் பற்றியும், அவர்களது உபதேச கருத்துக்களையும் சொல்வதாக இந்த வலைப்பூவை கொண்டு செல்ல உத்தேசம். குருவருள் துணை செய்யட்டும்.

குருவாய் வருவாய்



அன்பர் சந்திரமௌளி அவர்கள் குருவினை பற்றி ஒரு வலைப்பூ போடலாம் என்று அழைத்துள்ளார். அதுவும் இன்று குருவாரம். கரும்பு தின்னக் கூலி கேட்கவாவேண்டும்.இதோ குருவந்தனம்.
:
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர:


குரு: ஸாக்ஷாத் பரம் ப்ருஹ்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:


குருவே சர்வ லோகானாம் பிஷ்ஜே பவரோகினாம்


நிதயே ஸ்ர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம

(குருதான் பிரும்மா, விஷுணு, ஈச்வரன் மற்றும் அநாதியாய், பலவாய்,ஒன்றாய் பரம்பிரும்மாவகவும் இருக்கிறார் அப்படிப்பட்ட குருவை வணங்குகிறேன்)

(குருதான் எல்லா உலகங்கிலும் வியாபித்தும்,பிறப்பை அறுக்கும் மருந்தாகவும் இருக்கிறார்)

எல்லா கலைகளுக்கும் வற்றாத செல்வமாகவும் இருக்கும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்)
-
நடமாடும் தெய்வம் நீ அருள்வாய்)


-