Wednesday, February 13, 2008

நம் குருநாதன்


சித்தி தருநாதன்

தென்கமலை வாழ்நாதன்

பத்தி தருநாதன் பரநாதன்

முத்திப்பெருநாதன்

ஞானப் பிரகாசன் உண்மைதருநாதன்

நம்குருநாதன்.
ஆன்மாவை பிறப்பிலிருந்து சித்தியடையச்செய்யும் சொக்கநாதன்
தெற்கே இருக்கக்கூடிய கமலாயத்தில்(திருவாரூர்) இருக்கும் தியாகராஜ நாதன்
பர உலகத்துக்கு அழைத்துச் செல்லும் பக்தியை பெற்று தரும் சிதம்பர நாதன்
நமக்கு வேண்டிய முக்தியை அளிக்கவல்ல அண்ணாமலை நாதன்
ஒளி பொருந்திய ஞானத்தையும் வாழ்க்கையின் உண்மைநிலையை உணர்த்திடும் ஆலமர்ந்த நாதன் நம் தக்ஷிணாமூர்த்தி குருநாதன்

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆன்மாவை பிறப்பிலிருந்து சித்தியடையச்செய்யும் சொக்கநாதன்//

சொக்கநாதன்...அட ஆமாம்!எங்க ஊர்காரரு...நல்லாத் தெரியுமே!.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி குருவின் பல்வேறு வடிவங்களயும் நிலைகளயும் சிந்தித்தன் விளவு.சிவபோகாசாரம் என்ற நூலில் தருமபுர ஆதீனம் இப்படி குறிப்பிடுகிறார்

jeevagv said...

//சிவபோகாசாரம் என்ற நூலில் தருமபுர ஆதீனம் இப்படி குறிப்பிடுகிறார்//
அப்படியா, நல்லது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க ஜீவா வருகைக்கு நன்றி