Monday, February 9, 2009

யார் ஜகத்குரு? - கூரத்தாழ்வான் கலக்கம்!

கடந்த சில வாரங்களாக, பரவஸ்து சுந்தர் அண்ணா அவர்கள்,
கூரத்தாழ்வானின் 1000வது பிறந்தநாள் வைபவங்களை ஒட்டி,
ஆழ்வானின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர் இடுகைகளாக இட்டு வந்தார்கள்! நான்கு பகுதிகளாக வந்த தொடர் நிறைவுற்றது!

இந்த கைங்கர்யத்துக்கு, அண்ணாருக்கு நம் வாழ்த்தையும் வணக்கங்களையும், இவ்வமயத்தில் சொல்லிக் கொண்டு,
சுந்தர் அண்ணா எழுதி அருளிய இத்தொடரினை, இ-புத்தகமாக,
ஸ்ரீயப்பதியான எம்பெருமான் - பெருந்தேவித் தாயார் உடனுறை பேரருளாளன், காஞ்சி வரதனின் திருவடிகளில் சமர்பிக்கின்றோம்! இதோ புத்தகம்!

Kuresa Vaibhavam



இது வரை கூரேசர் பற்றி வந்துள்ள பதிவுகள் இதோ:

1. ஷைலஜா அக்கா எழுதிய, கூரேசன் சீர் கேளீரோ!

2. KRS, கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்தநாள்

3. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1
குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2

4. கைலாஷி ஐயா எழுதிய, கண் கொடுத்த கூரேசர்

5. பரவஸ்து சுந்தர் அண்ணா எழுதிய, கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவுகள் (1-4)

இன்னும் வைபவப் பதிவுகள் நன்முறையில் வளர்ந்து,
ஆசார்ய மணம் பரப்ப, ஆசார்யர்கள் கிருபையையே முன்னிடுகிறோம்!

ஸ்ரீவத்சசிஹ்ந மிஸ்ரேப்யோ, நம உக்திமதீமஹே!
யதுக்தய ஸ்த்ரயீகண்டே, யாந்தி மங்கள ஸூத்ரதாம்!!

(கூரத்தாழ்வாரின் தனியன்)


ஜகத்குரு-அணுக்க சீடர், சேர்த்தி சேவை!


திருவரங்கம், வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் - போதாதா வாக்குவாதம் தோன்ற? :) இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்! அதனால் தவறில்லை!

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம்,
கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது! - யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்! சரி வம்பே வேணாம்! ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - கீதாசார்யன் - அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...

கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்! கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!


"மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குரு? அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே! கீதையே நேரில் கேட்டவனுக்கே இந்தக் கதி!

ஆனால் நம் இராமானுசர், நம் அத்தனை பேரையும், கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா? இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்! கண்ணனிடமா அவை இருக்கின்றன?

இதில் இருந்தே தெரியவில்லையா? யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா? அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன், காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"

அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்! இவர் காவிரியில் நடக்கத் துணிந்த கதை அப்படியே பத்ம்பாதர் கதை போலவே இருக்கல்லவா?
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க, "ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!

"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!

அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ, இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "

இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!


இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்! ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??

கூரத்தாழ்வார்-இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!

29 comments:

Anonymous said...

நல்ல ஆக்கம். சொற்பிழை, பொருட்பிழை மற்றும் தவறான சொற்கோப்புகளை இன்னும் நீக்கவில்லையே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//paravasthu said...
சொற்பிழை, பொருட்பிழை மற்றும் தவறான சொற்கோப்புகளை இன்னும் நீக்கவில்லையே//

நீக்கிக் கொடுங்கள்! இன்னொரு முறை செய்து விடலாம் சுந்தர் அண்ணா!

//பொருட்பிழை//

???
எதைக் குறிக்கின்றீர்கள்? பொருட்பிழை இல்லாமல் அல்லவா எழுதி இருப்பீர்கள்? சொற்பிழைகள் சாதாரணமானவை தான்!

Anonymous said...

//எதைக் குறிக்கின்றீர்கள்? பொருட்பிழை இல்லாமல் அல்லவா எழுதி இருப்பீர்கள்? சொற்பிழைகள் சாதாரணமானவை தான்!//

உ.ம். அரங்கக்கோயிலின் சாவி வாங்கிய வைபவ நோக்கம் சரியாக எழுதப் படவில்லை. சோழனின் பெயர்ப் பதிவை மாற்றுதல் முதலியன, மற்றும் குமரன் அவர்கள் குறிப்பிட்டபடி ஆஸ்ரயித்தல் எனும் சொல்லை நீக்குதல்

Venkatasubramanian said...

//அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ, இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "

இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!//

இந்த மேற்சொன்ன வாக்கியங்கள் என்னைச் சிந்திக்க வைக்கின்றன.
குரு யார் ?
பரம குரு யார் ?
ஆசார்யர் யார் ?
ஜகத் குரு யார் ?

சுந்தர காண்டத்தில் வால்மீகி , சீடனை 'கு' என்னும் அஞ்ஞான இருட்டில் இருந்து காப்பவனே குரு என்கிறார். (ரு என்பது விடிவு)

தாபத்ரயத்தால் சீடனைத் தானே தேடிப் போய் உபதேசிக்கிறவர் பரம குரு. (வால்மீகி)

அப்படியானால் ஆசார்யர் யார் ? அவர் இப்படியான ஒரு குரு பரம்பரையையே உருவாக்குகிறவர் அல்லவா ? ( தவறானால் திருத்துக)

அப்படியானால் ஜகத்குரு யார் ? " யார் மானுடம் முழுமைக்கும் ஒப்பற்ற, பொதுக்கருத்தை உபதேசித்தாரோ, யாரால் வேதங்களிற் சொல்லப்பட்ட ரகசியங்களை பாமரன் முதல் ஞானி வரை அறிந்து கொள்ளுமாறு , திரிபு இல்லாமல் கூற முடிந்ததோ, யாரால், கால வரையறை இன்றி முக்காலத்திற்கும் ஏற்ப மானுடத்தின் விடிவைப் பற்றிக் கூற முடியுமோ , அவரே."

இதற்குப் பொருத்தமானவர் யார் ? கலியுகத்தில் இது வரை ஸ்ரீ கிருஷ்ணன் மட்டுமே. அதற்கு அடுத்ததாக வரக் கூடியவர் ஸ்ரீ சங்கரர். நான் மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் சங்கரர் ஒருவரே தெய்வப் பாகுபாடு இன்றி, பக்தியை மட்டுமல்லாது, ஞானம், கர்மம், போன்ற நெறிகளின் மேன்மையையும் எடுத்தியம்பியவர்.

மேலும், இந்த அடிக்குறிப்பின் மூலமாக என் மற்றுமொரு பணிவான கருத்து. மேலே சொன்ன குரு, பரமகுரு, ஆசார்யர் விளக்கம் சரியாக இருப்பின், தெரசா போன்றோர் இந்த எந்த பிரிவிலும் இல்லை என்பது தெரிய வரும். ஷீரடி பாபா தனி ஓர் மஹான். இது போன்றே சித்தர்களும். சித்தர்களில் , திருமூலரைத் தவிர , பிறர் மக்களிடம் தொடர்பில்லாமலே இருந்து வந்துள்ளனர்.

மற்றபடி, நம் நாட்டில் தோன்றிய அனைவரும் ஏதோ ஒரு குரு பரம்பரையின் விளைவுகளே. ஆக, ஆச்சார்ய ஹிருதயத்தில் இடம் பெறத் தகுதி பெற்றவர் பாரத ஞானிகளே. இது குறுகிய நோக்காகத் தோன்றினாலும், இது என் வகையில் சரியாகத் தோன்றுகிறது.

அன்பன்
வெங்கட்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உ.ம். அரங்கக்கோயிலின் சாவி வாங்கிய வைபவ நோக்கம் சரியாக எழுதப் படவில்லை//

:)
பரவாயில்லை! அதைத் தான் பேசி விட்டோமே! அனைத்தும் ஒரே நூலில் அமைந்து விடாது!

//சோழனின் பெயர்ப் பதிவை மாற்றுதல் முதலியன, மற்றும் குமரன் அவர்கள் குறிப்பிட்டபடி ஆஸ்ரயித்தல் எனும் சொல்லை நீக்குதல்//

மேலும் அவர் திருவடி-இவர் திருவடி போன்ற சிறுசிறு எழுத்துப்பிழைகள்!
எல்லாம் களைந்து கொடுங்கண்ணா! இன்னொரு முறை பதிப்பிச்சிறலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Venkatasubramanian said...//

வாங்க வேங்கடசுப்ரமணியன் சார்!
தாமதத்துக்கு மன்னிக்கவும்!

//சுந்தர காண்டத்தில் வால்மீகி , சீடனை 'கு' என்னும் அஞ்ஞான இருட்டில் இருந்து காப்பவனே குரு என்கிறார். (ரு என்பது விடிவு)//

கு சப்தஸ் அந்தகாரஸ்ய!
ரு சப்தஸ் தன்னிரோதஹ!
-ன்னு சொல்வாங்க!

அந்தகாரம் என்னும் இருளை அஞ்ஞானம்-ன்னு மட்டுமே பார்க்கக் கூடாது! வெறுமை, வறுமை எல்லாம் அந்தகாரத்தில் அடங்கும்!

//தாபத்ரயத்தால் சீடனைத் தானே தேடிப் போய் உபதேசிக்கிறவர் பரம குரு. (வால்மீகி)//

இப்படி இலக்கணம் செய்ய முடியாது! அப்படிப் பார்த்தால் சங்கரரைத் தேடித் தான் பலர் வந்தார்கள்! அவர் தேடிப் போய் உபதேசம் செய்யவில்லையே! இது போன்ற இலக்கணங்களுக்குள் குரு என்னும் தாத்பர்யத்தை அடைக்கக் கூடாது என்பது அடியேன் பணிவான எண்ணம்!

//அப்படியானால் ஆசார்யர் யார் ? அவர் இப்படியான ஒரு குரு பரம்பரையையே உருவாக்குகிறவர் அல்லவா ? ( தவறானால் திருத்துக)//

தவறு தான்!
ஆசார்யர்கள் தமக்கு அடுத்த ஆசார்யர்களை முடிந்த வரை காட்டிச் செல்கிறார்கள்! ஆனால் மொத்த ஆசார்ய பரம்பரையையே அவர்கள் உருவாக்குவதில்லை!
ஆசார்ய பரம்பரையை உருவாக்குவது இறைவன் தான்!

//அப்படியானால் ஜகத்குரு யார் ? " யார் மானுடம் முழுமைக்கும் ஒப்பற்ற, பொதுக்கருத்தை உபதேசித்தாரோ,//


அப்படிப் பார்த்தால் வள்ளுவர் மட்டுமே ஜகத்குரு! :)))
சங்கரர் கூட இந்துக்களுக்கு மட்டுமே தான் செய்து வைத்தார். நீங்கள் சொன்னாப் போல மானுடம் "முழுமைக்கும்" அல்ல!

//யாரால் வேதங்களிற் சொல்லப்பட்ட ரகசியங்களை பாமரன் முதல் ஞானி வரை அறிந்து கொள்ளுமாறு//

பாமரன் அறியுமாறு செய்து வைக்கத் துவங்கியது நம்மாழ்வார்!
வேதத்தை அப்படியே தமிழாக்கினார்! வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்!
ஆனாலும் அது கவிதைத் தமிழில் இருந்ததால், அதைப் பாமரனுக்கும் கோபுரம் ஏறிச் சொன்னவர் இராமானுசர்! - இதை அடிப்படையாகக் கொண்டால் சங்கரரை இதில் சேர்க்க முடியாது-ன்னு ஆகிடும்!

//சங்கரர் ஒருவரே தெய்வப் பாகுபாடு இன்றி, பக்தியை மட்டுமல்லாது, ஞானம், கர்மம், போன்ற நெறிகளின் மேன்மையையும் எடுத்தியம்பியவர்//

சங்கரருக்கு முன் ஞானம்-கர்மம்-பக்தி-ன்னு எடுத்துச் சொன்னவர்கள் பல பேர்! கோவிந்த பாதர் உட்பட!
சங்கரருக்குப் பின்னும் பல பேர்! ஞானம்-கர்மம், ஏன் பக்தி கூடக் கடினம்-ன்னு, ஞான-கர்ம-பக்தி மூன்றும் இயல்பாய்க் கலந்த சரணாகதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும் உள்ளார்கள்!

எனவே...
குரு, ஆசார்யர், பரமகுரு, பரம ஆசார்யர்-ன்னு வகைப்படுத்துதல் என்பது இயலாத காரியம்!

ஆசார்ய ஹ்ருதயத்தை அளக்க முடியாது!
கொள்ளத் தான் முடியும் என்பது அடியேன் பணிவான விண்ணப்பம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தெரசா போன்றோர் இந்த எந்த பிரிவிலும் இல்லை என்பது தெரிய வரும்//

தெரேசா அஞ்ஞான இருளை வேறு வழியாக அகற்றினார்! ஞான விளக்கம் செய்யும் முன், உடல் விளக்கம் செய்ய வேண்டும்! அதையே செய்தார்! மதப் பிரச்சாரம் செய்யவில்லை! மாறாக அன்புப் பிரச்சாரம் செய்தார்!
ஆனால் கோட்பாடுகளில் அவருக்கு இருந்த ஞானம் வெளியில் தெரியாது இருக்கலாம்! அவர் நூல்களைப் படித்தால் தெரியும்! ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அனனி தெரேசா பற்றிச் செய்துள்ள ஆய்வை வாசியுங்கள்!

//ஷீரடி பாபா தனி ஓர் மஹான்//

இல்லை! ஆசார்ய பரம்பரை இல்லை என்பதால் அவர் குருவாக முடியாது என்றால் ரமணரை என்னன்னு சொல்வீங்க? :)
ரமணருக்கு இல்லாத சிஷ்யகோடிகளா?

ஆசார்ய பரம்பரை தொடங்கி நடுவழியில் நின்று போன சம்பவங்களும் பல உண்டு! அவர்கள் எல்லாம் ஆசார்யர்களாக இருந்து, நின்று போன பின் ஆசார்ய பதவி இழந்தார்கள்-ன்னு இல்ல ஆகிவிடும்!? தவறு! தவறு!

//இது போன்றே சித்தர்களும். சித்தர்களில் , திருமூலரைத் தவிர , பிறர் மக்களிடம் தொடர்பில்லாமலே இருந்து வந்துள்ளனர்//

கருவூர் சித்தருக்கு மக்கள் தொடர்பு உண்டு! சித்தர்களுக்கு ஆசார்ய பரம்பரை உண்டே!
அகத்தியர்
போகர்
புலிப்பாணி
கருவூரார்
இடைக்காடர்-ன்னு நீளுமே!

எந்தரோ மகானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு!
எந்தரோ பரம ஆசார்யலு
அந்தரிகி வந்தனமுலு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சங்கரரைப் பகவத்பாதர் என்று தான் சொன்னார்கள்!
ரமணரையோ பகவான் என்றே சொன்னார்கள்!
(வியாச பகவான், வால்மீகி பகவான் வரிசையில்)

அதற்காக சங்கரர் பரம ஆசார்யர் இல்லை என்று ஆகிவிடுமா?
அதனால் தான் அடியேன் இங்கு அடிக்கடி வலியுறுத்துவது:
ஆசார்யர்கள் என்று வரும் போது, "ஹிருதயம்" மட்டு"மே" முதன்மையாகப் பார்க்க வேணும்! - அதான் ஆசார்ய ஹிருதயம்!

ஆசார்ய மானசம் இல்லை!
ஆசார்ய ஞானம் இல்லை!
ஆசார்ய மூளை இல்லை!
ஆசார்ய ஹஸ்தம் இல்லை!

ஆசார்ய ஹ்ருதயம்! ஆசார்ய ஹ்ருதயம்!

Venkatasubramanian said...

//இப்படி இலக்கணம் செய்ய முடியாது! அப்படிப் பார்த்தால் சங்கரரைத் தேடித் தான் பலர் வந்தார்கள்! அவர் தேடிப் போய் உபதேசம் செய்யவில்லையே! இது போன்ற இலக்கணங்களுக்குள் குரு என்னும் தாத்பர்யத்தை அடைக்கக் கூடாது என்பது அடியேன் பணிவான எண்ணம்!//

ஒரு பரமாச்சார்யர் பரம குருவாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டா ? சொல்ல வந்த விஷயம் குரு முதல் ஜகத்குரு வரை உள்ளவர்களின் (வார்த்தைகளுக்கு உட்பட்ட) வரையறை அவ்வளவே.

///தவறு தான்!
ஆசார்யர்கள் தமக்கு அடுத்த ஆசார்யர்களை முடிந்த வரை காட்டிச் செல்கிறார்கள்! ஆனால் மொத்த ஆசார்ய பரம்பரையையே அவர்கள் உருவாக்குவதில்லை! ///


இது சர்ச்சைக்குரியது. எந்த ஒரு ஆசாரியரும் இன்னொருவருடைய கருத்தை ஏற்றதில்லை. ஆச்சாரியார் ஒவ்வொருவரும் தத்தம் வகையில் சீவன் முக்தர்கள் ஆகியவர்கள். அல்லது ஏற்கெனவே முக்தர்களாக இருந்து தமது சொந்த சங்கல்பத்தினால் பிறப்பவர்கள்.இதில் ''தத்தம்' என்ற வார்த்தை முக்கியம். இந்து மதத்தின் சிறப்பே இதில் தான். இப்படி வழி பலவாக இருக்கும் போது (இலக்கு ஒன்றாக இருப்பினும்) வேறுபடுதல் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுவும் ஆச்சார்யர் என்ற நிலையிலேயே.

///ஆசார்ய பரம்பரையை உருவாக்குவது இறைவன் தான்!///

இதிலும் பிரச்சினை உண்டு. எல்லாச் செயலும் அவனுடையது தான் என்னும் பொழுது இதுவும் அப்படியே. இது வரை (பக்தி மார்க்கத்தை தவிர) இதற்கு விளக்கம் இல்லை என்பதே உண்மை.

//அப்படிப் பார்த்தால் வள்ளுவர் மட்டுமே ஜகத்குரு! :)))
சங்கரர் கூட இந்துக்களுக்கு மட்டுமே தான் செய்து வைத்தார். நீங்கள் சொன்னாப் போல மானுடம் "முழுமைக்கும்" அல்ல! //

ரவி சங்கர் அவர்களே, வள்ளுவரைத் தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. வள்ளுவருக்குள் சமணரான 'ஏலாச்சாரியார்' இருப்பது இருட்டடிப்பு செய்யப்படிருக்கிறது. ' அறவாழி அந்தணன் தாழ், எண்குணத்தான் தாழ், மலர் மிசை ஏகினான் மாண் அடி' போன்றவை அருகரையே குறிக்கும். பார்க்க
http://banukumar_r.blogspot.com/2008/02/blog-post_16.html#comments

//பாமரன் அறியுமாறு செய்து வைக்கத் துவங்கியது நம்மாழ்வார்!
வேதத்தை அப்படியே தமிழாக்கினார்! வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்!
ஆனாலும் அது கவிதைத் தமிழில் இருந்ததால், அதைப் பாமரனுக்கும் கோபுரம் ஏறிச் சொன்னவர் இராமானுசர்! - இதை அடிப்படையாகக் கொண்டால் சங்கரரை இதில் சேர்க்க முடியாது-ன்னு ஆகிடும்!//

சிறு கருத்து. சங்கரரின் வேதாந்த விளக்கம் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. அத்வைதத்திற்கு அவர் நாமமும் ரூபமும் உள்ள கடவுளை அடைபொருளாகச் சொல்லவில்லை. ஆனால் மத்வரும், இராமானுஜரும் நாராயணனை முன் நிறுத்தியே தங்கள் பிரஸ்தான திரைய பாஷ்யங்களை எழுதினர். விசிஷ்டாத்வைதத்திலோ, துவைதத்திலோ சிவனையும், முருகனையும் சேர்க்க முடியுமா ?

இன்னொன்று. நம்மாழ்வார் திருவாய் மொழியில் வேதத்தில் கூறப்பட்ட உருவமற்ற பரம்பொருளைப் பாடவில்லை. மாறாக, புராணத்தில் கூறப்பட்ட நாராயணனையே வைத்து 'உயர்வற உடல் நலம் உடையவன் ...' என்று பாடினார்.

///சங்கரருக்கு முன் ஞானம்-கர்மம்-பக்தி-ன்னு எடுத்துச் சொன்னவர்கள் பல பேர்! கோவிந்த பாதர் உட்பட!
சங்கரருக்குப் பின்னும் பல பேர்! ஞானம்-கர்மம், ஏன் பக்தி கூடக் கடினம்-ன்னு, ஞான-கர்ம-பக்தி மூன்றும் இயல்பாய்க் கலந்த சரணாகதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும் உள்ளார்கள்!///

இதில் வ்யாசரையும், (ஏன் , போதாயனர் என்ற கீதைக்கு முதல் உரை ஆசிரியரையும்) சேர்த்துக் கூறலாம். விஷயம் அதுவல்ல. சங்கரர் உதித்த போது சனாதன தர்மம் எழுபத்தி இரண்டு பிரிவுகளாக (கடவுள் வாரியாகவும், சிறு சிறு தத்துவப் பிரிவுகளாலும்) கூறுபட்டிருந்தது. சங்கரர் வைதீக அடிப்படையில் இவைகளை இணைத்து ஆறு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கினார். எவ்வித காய்ப்பும் உவப்பும் இன்றி எல்லா கடவுள்கள் மீதும் பாடல்கள் பாடினார். ஆனால் விசிஷ்டாத்வைதம் விநாயகரைத் தும்பிக்கை அழ்வாராக மாற்றி அவருக்கு திரு மண் சாற்றிய பிறகே ஏற்றுக்கொண்டது !

சங்கரர், பாரத வரலாற்றில் முதல் முறையாக வேதாந்தம் என்ற வழியிலேயே வருங்காலம் சிந்திக்க வேண்டும் என்று கருதி வேதங்களை முன்னிலைப்படுத்தவில்லை. இதையே இராமானுஜரும், மத்வரும் பின்பற்றினர்.

மீண்டும் கூறுகிறேன். இதில் ஒப்பு நோக்கு ஏதும் இல்லை. சங்கரர் மதவாதியல்ல. மதங்களுக்கு அப்பாற்பட்டவர். மற்ற இருவரும் அப்படி அல்ல. வைணவத்திற்குள் அடங்கியவர்கள்.

இவர்களுக்குள் கிருஷ்ணனைத் தவிர யாரை ஜகத் குருவாக அங்கீகரிப்பீர்கள் ?

Venkatasubramanian said...

//சுந்தர காண்டத்தில் வால்மீகி , சீடனை 'கு' என்னும் அஞ்ஞான இருட்டில் இருந்து காப்பவனே குரு என்கிறார். (ரு என்பது விடிவு)//

கு சப்தஸ் அந்தகாரஸ்ய!
ரு சப்தஸ் தன்னிரோதஹ!
-ன்னு சொல்வாங்க!/////

பொறுக்கவும். இது வால்மீகி உடையது அல்ல. இன்று தேடிப் பார்த்த போது அது உரையாசிரியரின் மேற்கோள் என்று புரிந்தது. உ வே ஸ்ரீனிவாசய்யங்கார் ஒரு வேளை பூர்வ உரையான கோவிந்த ராஜீயத்தில் இருந்து எடுத்தாண்டிருக்கலாம். ச்லோகங்களுக்கு இடப்பட்ட எண்ணே அவர் உரையில் (லிப்கோ) இருந்ததால் இந்த தவறு.

Venkatasubramanian said...

///தெரேசா அஞ்ஞான இருளை வேறு வழியாக அகற்றினார்! ஞான விளக்கம் செய்யும் முன், உடல் விளக்கம் செய்ய வேண்டும்! அதையே செய்தார்! மதப் பிரச்சாரம் செய்யவில்லை! மாறாக அன்புப் பிரச்சாரம் செய்தார்!
ஆனால் கோட்பாடுகளில் அவருக்கு இருந்த ஞானம் வெளியில் தெரியாது இருக்கலாம்! அவர் நூல்களைப் படித்தால் தெரியும்! ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அனனி தெரேசா பற்றிச் செய்துள்ள ஆய்வை வாசியுங்கள்!///

நமது நாட்டில் பிரச்சாரங்களுக்கு குறைவே இல்லை. அதில் இந்த 'உன்னதப் பெண்மணி' பிரச்சாரமும் ஒன்று. தவமும், தானமும் தருமமும் நமது இயல்பு. இதில் ஒரு மதப் பிரச்சாரகர் சொல்லி விளங்க வேண்டியது என்ன உள்ளது ? தெரசா ஒரு சர்ச்சைக்கு உட்பட்ட நபர். ஏழாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் பள்ளி ஒன்று நடத்துவதாகக் கூறி பணம் வசூலித்து வந்தவர். (அதை இன்று வரை தேடுகிறேன்) மன நிலை குன்றிய குழந்தைகளை அவரது இல்லம் கட்டிலில் கட்டிப் போட்டது. (யார் பார்ப்பது என்ற அலட்சியமோ ?) அவரது மிஷன்ஸ் ஆப் சாரிட்டி நிறுவனம் , உங்களுக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் சேவை நிறுவனங்கள் நடத்தி வருகிறதா ? ஆம் என்றால் எந்த அளவில் ?

உங்களது தேடல் விபரத்தையும் இந்த சிறு புள்ளி விவரத்தையும் ஒப்பு நோகுஉங்கள். இதோ அந்த புள்ளி விவரம்: தெரசா வின் நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய அளவில் தர்மம் பெரும் நிறுவனம். இந்தியர்களைக் காட்டியே இத்தனை நன்கொடையும் பெறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அவர்கள் செய்யும் உண்மைச் சேவை என்ன ? தம்மாத்தூண்டு ராமகிருஷ்ண மடம் தன் வெறும் எழுநூறு கோடியில் செய்து காண்பிப்பது எவ்வளவு ? ஆயிரக்கணக்கான கோடிகளில் புரளும் அவரது இயக்கம் செய்தது எவ்வளவு ?


மேற்சொன்னது சேவை என்ற விவரம். இன்னொரு பரிணாமம் இதோ. என் மருத்துவ நண்பர் ,ஒரு மடல் குழுமத்தில் இந்த தகவலை எழுதினர். மும்பையில் கட்டாவ் நிறுவனம் தானமாகக் கொடுத்த கட்டிடத்தில் முதியவர் இல்லம் தெரசா தொடங்கினார். அங்கே அவர்கள் செய்த முதல் வேளை அத்தனை பேரையும் மதம் மாற்றினது தான். இறக்கும் தருவாயில் இருந்தவர்களையும் விடவில்லை. இத்தனைக்கும் நடத்தப் பணம் கொடுத்தவர், இடம் கொடுத்தவர் இருவருமே இந்துக்கள்.

ஆச்சாரியர் என்பவர் இந்த குணாதிசயங்களை கொண்டிருக்கலாமா ?

Venkatasubramanian said...

//கருவூர் சித்தருக்கு மக்கள் தொடர்பு உண்டு! சித்தர்களுக்கு ஆசார்ய பரம்பரை உண்டே!
அகத்தியர்
போகர்
புலிப்பாணி
கருவூரார்
இடைக்காடர்-ன்னு நீளுமே!//

இராமானுஜர் உபதேசம் பெற்றதை கோவில் கோபுரத்தில் மீதிருந்து கூறினார். சித்தர்கள் சங்கம் வெளிப்படையாக எழுதப்பட்ட ஒரு நூலை அழித்தது. (எந்த சித்தருடையது என்று நினைவில்லை)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வேங்கட சுப்ரமணியன் ஐயா...
நன்றி. ஒரு சில மாறுபாடுகள்...

//சிறு கருத்து. சங்கரரின் வேதாந்த விளக்கம் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. அத்வைதத்திற்கு அவர் நாமமும் ரூபமும் உள்ள கடவுளை அடைபொருளாகச் சொல்லவில்லை//

சங்கர பாஷ்யம் அவசியம் வாசிக்கவும்!
நாராயண பரோவக்யாத் அண்டமவ்யக்த சம்பவம்....நாராயணஹ பரஹ-ன்னு வருகிறது!
பரம்பொருள் நாராயணன் என்று சொல்லித் துவங்குகிறார் சங்கரர்! அப்புறம் எப்படி மதத்தைக் குறிப்பிடலை? குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பிடலை-ன்னு சொல்றீங்க?

//ஆனால் மத்வரும், இராமானுஜரும் நாராயணனை முன் நிறுத்தியே தங்கள் பிரஸ்தான திரைய பாஷ்யங்களை எழுதினர்//

தவறு! இராமானுசர் மேல் உள்ள ஒரு பெரும் குற்றச்சாட்டு, தமது ஸ்ரீ பாஷ்யத்தில் பரப்பிரம்மம் என்கிறாரே தவிர வெளிப்படையாக நாராயண சப்தத்தைக் காட்டவில்லை-என்ற ஒரு குற்றச்சாட்டு வைணவத்திலேயே உண்டு! :))

//விசிஷ்டாத்வைதத்திலோ, துவைதத்திலோ சிவனையும், முருகனையும் சேர்க்க முடியுமா ?//

அத்வைதத்தில் மட்டும் சேர்க்க முடியுமா என்ன?
ஷண்மத அமைப்பில் தானே சேர்க்க முடியும்? ஷண்மதம் என்ன அத்வைதமா?

There is a difference between philosophy & faith!
Philosophy = Advaita, Vishistadvaita, Dvaita
Faith = Saivam, Vainavam, Saaktham etc.

A person can believe saktham faith and follow vishistadvaita concepts.

//இன்னொன்று. நம்மாழ்வார் திருவாய் மொழியில் வேதத்தில் கூறப்பட்ட உருவமற்ற பரம்பொருளைப் பாடவில்லை//

வேதத்தில் கடவுளை உருவம் அற்றதாகத் தான் சொல்லி இருக்கா? ரிக் வேத சாகைகளில் பெருமானின் தோற்றம் வர்ணிக்கப்படவில்லையா என்ன?

//மாறாக, புராணத்தில் கூறப்பட்ட நாராயணனையே வைத்து 'உயர்வற உடல் நலம் உடையவன் ...' என்று பாடினார்/

தவறோ தவறு!
புராணத்தில் சொல்லப்பட்டவன் நாராயணன்!
வேதத்தில் சொல்லப்படவில்லை என்பது போல் உள்ளது உங்கள் வாதம்!
வேதங்களில் நாராயண சப்தம் எங்கெல்லாம் வருகிறது என்று சூக்தங்களைப் பாருங்கள்! தெரியும்!

//சங்கரர் மதவாதியல்ல. மதங்களுக்கு அப்பாற்பட்டவர். மற்ற இருவரும் அப்படி அல்ல. வைணவத்திற்குள் அடங்கியவர்கள்//

அது உங்களுடைய முடிபு!
இரண்டையுமே சங்கரர் செய்ததால், அத்வைதம் என்றால் ஷண்மதம் என்பது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாகிறது! அதனால் தான் விசிஷ்டாத்வைதத்திலோ, துவைதத்திலோ சிவனையும், முருகனையும் சேர்க்க முடியுமா?-ன்னு நீங்களே கேட்கறீங்க!

ஆனால் அத்வைத/விசிஷ்டாத்வைத தத்துவங்களுக்கும், குறிப்பிட்ட இறை வழிபாட்டிற்கும் சம்பந்தம் கிடையாது!

மற்ற பதில்களுக்கு பின்னர் வருகிறேன்!

Venkatasubramanian said...

///சங்கர பாஷ்யம் அவசியம் வாசிக்கவும்!
நாராயண பரோவக்யாத் அண்டமவ்யக்த சம்பவம்....நாராயணஹ பரஹ-ன்னு வருகிறது!
பரம்பொருள் நாராயணன் என்று சொல்லித் துவங்குகிறார் சங்கரர்! அப்புறம் எப்படி மதத்தைக் குறிப்பிடலை? குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பிடலை-ன்னு சொல்றீங்க?///

இரவி சங்கர் அவர்களே
மேற்சொன்ன ஸ்லோகத்திற்கு நன்றி. இது குறித்து சற்று ஆய்ந்து பிறகு கூறுகிறேன்.

இந்த ச்லோகத்தாலும் சங்கரரின் பின்னணி மாறாது. அவர் திருநீற்றுப் பட்டை போட்டுக் கொண்டு நாராயணனின் பெருமையை எழுதினார். இன்றளவும் ஸ்மார்த்த சம்ப்ரதாயம் அப்படியே பின்பற்றி வருகிறது.

லிங்காஷ்டகத்தில் 'ப்ரஹ்ம முராரி சுரார்ச்சித லிங்கம் " என்று பாடுகிறாரே , கவனித்தீர்களா ?

//அத்வைதத்தில் மட்டும் சேர்க்க முடியுமா என்ன?
ஷண்மத அமைப்பில் தானே சேர்க்க முடியும்? ஷண்மதம் என்ன அத்வைதமா?

There is a difference between philosophy & faith!
Philosophy = Advaita, Vishistadvaita, Dvaita
Faith = Saivam, Vainavam, Saaktham etc.

A person can believe saktham faith and follow vishistadvaita concepts.//

ஒவ்வொரு மதத்திலும் சடங்கு, புராணம் , தத்துவம் என்ற பிரிவுகள் உண்டு. சங்கரரின் முத்திரை ஷண் மதங்களிலும் உண்டு- அவர் ஸ்தாபித்தவர் என்ற அளவில். ஷண் மதப் பிரார்த்தனைகளில் அவருடைய பாடல்கள் உண்டு.

சங்கரரின் கொடைகளில் ஆறு மதங்களும் உண்டு. அத்வைதம் அவருடையது அன்று. அவருடைய குருவும் அதனை அறிந்தவர். சங்கரரின் பணி அதை சாஸ்த்ர சம்மதம் ஆக்கியது.

அத்வைதிகள் இன்றும் பகவானது மூர்த்திகளை ஏளனமாக நோக்குகின்றனர். ஆனால், சங்கரர் புராண மற்றும் தந்திரக் கலப்பு சேர்ந்த மதங்களையும் அவைகளின் தத்துவங்களின் உருவகங்களான விக்கிரகங்களையும் ஏற்றுக் கொண்டார். இது ஒரு விரிவான விஷயம். ஒரு தனி பதிவே வேண்டும்.

///வேதத்தில் கடவுளை உருவம் அற்றதாகத் தான் சொல்லி இருக்கா? ரிக் வேத சாகைகளில் பெருமானின் தோற்றம் வர்ணிக்கப்படவில்லையா என்ன?///

///தவறோ தவறு!
புராணத்தில் சொல்லப்பட்டவன் நாராயணன்!
வேதத்தில் சொல்லப்படவில்லை என்பது போல் உள்ளது உங்கள் வாதம்!
வேதங்களில் நாராயண சப்தம் எங்கெல்லாம் வருகிறது என்று சூக்தங்களைப் பாருங்கள்! தெரியும்!////

மேற்சொன்னவை என் மனதை ஒரு வருடமாகவே பிழிந்து வருபவை. நம்முடைய பாரம்பரிய (classical) அணுகுமுறையின் படி வேதத்தை பிராம்மணங்கள் மற்றும் ஆரண்யகங்கள் உடனேயே சேர்த்துப் பார்க்கிறோம். இந்த முறை தவறு என்று ஸ்வாமி தயானந்தர் வாதாடினார். பிராம்மணங்கள் வேத காலத்து புராணங்கள். ஆரண்யகங்கள் கடைக்கால வேத இணைப்புகள் என்றார்.

உண்மையே. புராணம் 'அபௌருஷேயம்' அல்ல. அதே போல் ஆரண்யகமும். அங்கே பெயர்ச்சொற்கள் உபயோகப் படுகின்றன. பெயர்ச்சொல்லும், கடந்த காலமும் எங்கே கூறப் படுகின்றனவோ, அங்கே காலம் கடந்த நிலை அடிபடுகிறது. இதனாலேயே தயானந்தர் சம்ஹிதை மட்டுமே வேதம் என்று வாதிட்டார். சம்ஹிதை மட்டுமே ஆதியும் அந்தமும் அற்றது. மற்றவை பிற்கால இணைப்புகள்.

நீங்கள் கூறிய சூக்தத்திற்கு வருகிறேன்.

வேதத்தில் கூறப்பட்ட விஷ்ணு யாரென்று தயவு செய்து மீண்டும் பார்க்கவும். 'விஷ்ணு' என்றால் எங்கும் வ்யாபிப்பவன் என்று பொருள். இங்கே இது வெறும் 'அட்ஜெக்டிவ்' (adjective) மட்டும். நௌன் (noun)அல்ல.

நாராயண சூக்தம் தைத்திரீய ஆரண்யகத்தில் உள்ளது. ஸம்ஹிதையில் அல்ல. ஸ்ரீ சூக்தம் புராண மந்திரங்களும் கலந்தது. நாராயண என்பதன் பொருள் தாங்கள் அறிந்ததே. வேத காலத்து பெயர்கள் ஏன் கடவுளர் பெயரில் இல்லை ? ஏன் என்றால் அப்பொழுது பெயர் உடைய கடவுள் இல்லவே இல்லை.

இன்னொரு வேடிக்கை. 'ரிதம் சத்யம் பரம் ப்ரஹ்ம ...' என்று வரும் மந்திரம் சிவனைக் குறிப்பதாக ஒரு விளக்கம் படித்தேன். ஆனால் அது விஷ்ணு சூக்தத்திலும் வருகிறது. திருப்பதியில் ருத்ரம் சொல்லியே பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதாகக் கேள்வி. உண்மையா ? இது எங்கள் அர்ச்சகர் சொன்னது.

ஆக வேதத்தில், சைவமும், வைணவமும் இல்லை. வேதத்தில் தேவதைகள் உண்டு. அவை யார் ? இதுவும் பெரு விளக்கம் தேவையான ஒன்று.

இங்கே ஸ்மார்த்த சந்த்யா வந்தனம் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் ஒரு விண்ணப்பம். அதில் விநாயகர், கிருஷ்ணன் மற்றும் காயத்திரி தேவியின் உருவத் துதிகளை நீக்கிவிட்டு (அவை பக்தி காலத்தை சார்ந்தவை) மந்திரங்களை தனியாக வாசிக்கவும். நீங்கள் பக்தி என்ற அடித் தளத்தை விட்டு தனியாக நிற்பதை உணர முடியும்.

நாம் பக்தி என்ற நிறக் கண்ணாடி மூலம், வேதக் காலத்தைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. நம்முடைய மதம் புராண மதம். பக்தி மதம். தந்திர சாஸ்திரத்தால் கலப்பு ஆன மதம். ஆயினும் இத்தனை குறைவு படுத்தவில்லை. பக்தி மதம் மஹாபாரத காலத்திற்கு பிற்பட்டது. கீதை தொட்டே வந்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வேங்கடசுப்ரமணியன் ஐயா

போகிற போக்கில் தங்கள் அனுமானங்கள் பலவற்றைத் தெளித்துச் செல்கிறீர்களே!

//அத்வைதிகள் இன்றும் பகவானது மூர்த்திகளை ஏளனமாக நோக்குகின்றனர்//
//வேத காலத்து பெயர்கள் ஏன் கடவுளர் பெயரில் இல்லை ? ஏன் என்றால் அப்பொழுது பெயர் உடைய கடவுள் இல்லவே இல்லை//
//திருப்பதியில் ருத்ரம் சொல்லியே பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதாகக் கேள்வி//
//காயத்திரி தேவியின் உருவத் துதிகளை நீக்கிவிட்டு (அவை பக்தி காலத்தை சார்ந்தவை) மந்திரங்களை தனியாக வாசிக்கவும். நீங்கள் பக்தி என்ற அடித் தளத்தை விட்டு தனியாக நிற்பதை உணர முடியும்//

இதற்கெல்லாம் திவா சார், திராச ஐயா, மெளலி அண்ணா போன்ற பெரியோர்கள் தான் வந்து சொல்ல வேண்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரவி சங்கர் அவர்களே, வள்ளுவரைத் தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. வள்ளுவருக்குள் சமணரான 'ஏலாச்சாரியார்' இருப்பது இருட்டடிப்பு செய்யப்படிருக்கிறது. ' அறவாழி அந்தணன் தாழ், எண்குணத்தான் தாழ், மலர் மிசை ஏகினான் மாண் அடி' போன்றவை அருகரையே குறிக்கும்//

ஹிஹி!
அதெல்லாம் நீங்க வியாக்யானம் சொன்ன பிறகு ஐயா!
வியாக்யானம் சொல்லும் முன்னர், அதெல்லாம் பொதுப் பொருளாகத் தான் உள்ளது!

எப்படி "விஷ்ணு" என்பது வேதத்தில் adjective என்று சொன்னீர்களோ, அதே போல் தான் குறளிலும்!
அறவாழி அந்தணன், எண்குணத்தான், மலர் மிசை ஏகினான் எல்லாம் noun-ஆகப் பார்க்காமல் adjective-ஆக பார்க்கலாம் அல்லவா?

தனக்குச் சரிப்பட்டு வரும் இடத்தில் மட்டும் adjectiveஆக பார்ப்பது சரி அல்லவே! :)))

அடியேன் சொல்லவந்தது என்னவென்றால் சங்கரர் ஆறு சமயங்களையும் பாடி விட்டார் என்பதை மட்டும் வைத்து,
"மானுடம் முழுமைக்கும்", அவர் அமைத்து வைத்தார் என்று நீங்கள் சொல்ல முடியாது என்பது தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வேங்கடசுப்ரமணியன் ஐயா
உங்கள் வினாக்களுக்கான சுருக்கக் குறிப்புகள்:
1. அத்வைதம் என்பது வேறு! ஷண்மதம் என்பது வேறு!

விசிஷ்டாத்வைதத்தில் முருகனோ சக்தியோ சொல்லப்படுவார்களா என்ற கேள்வியே தவறு!
அத்வைதத்திலேயே அவர்கள் சொல்லப்படவில்லை!

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்ற மூன்றுமே தத்துவங்கள்! மதங்கள் அல்ல! மூன்றிலுமே பரப்பிரம்மம் நாராயணன் (adjective) என்று தான் பேசப்படுகிறது!

அத்வைதிகள் என்று சொல்பவர்கள், அத்வைத தத்துவத்தைக் கொள்பவர்கள்! அவர்கள் மதம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்!

அத்வைதிகள் என்றாலே ஏதோ ஷண்மதங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள், பரந்து விரிந்த மனம் கொண்டவர்கள் என்றும், விசிஷ்டாத்வைதத்தில் அப்படி கிடையாது என்றும் சொல்வது, அடிப்படையிலேயே தவறு!

அத்வைதிகள் எல்லாரும் ஷண்மத ஈடுபாட்டில் இருக்கணும்-ன்னு அவசியம் இல்லை! இரண்டும் வெவ்வேறு!

அத்வைதம் = தத்துவ மார்க்கமாகவும்,
ஷண்மதம் = சமூகத்தின் பொருட்டும்,
சங்கரர் செய்து வைத்தார்! அவ்வளவு தான்! அவர் ஷண்மதம் செய்ததினாலேயே பொதுவானவர் என்றும் மற்ற ஆசார்யர்கள் பொதுவானவர்கள் அல்லர் என்றும் நீங்கள் சொல்வதில் ஒரு நியாயமும் இல்லை!

மற்ற ஆசார்யர்களும் அனைத்து தேவதைகளையும் போற்றி உள்ளார்கள்! நம்மாழ்வார் ஈசனைப் போற்றிப் பாடும் பாடல்கள் பல! அதை விரித்துரைத்து திருவரங்கம்-திருவானைக்கா என்று ஒன்றுபட்ட விழா கண்ட இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று ஆசார்யர்கள் உள்ளனர்! மாத்வ மடத்திலும் சிவ துதிகள் உண்டு!

காலத்தால் முந்தைய சங்கரர், சமூகம் சிதறி விடாது இருக்க, ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொண்டார்! அதுவே ஷண்மத ஸ்தாபனம்!

வியாச பகவான் செய்யவில்லையா? அதையே தான் சங்கரரும் செய்தார்! அதற்கான துதிகள் ஆங்காங்கு இயற்றினார்! ஒருங்கிணைப்பு ஆன பின்னும், பின் வந்த ஆசார்யர்கள் அதையே செய்து கொண்டிருக்கணும்-ன்னு அவசியம் இல்லை!

அதனால் சங்கரர் மட்டுமே பொதுவானவர் என்றும் பின் வந்த ஆசார்யர்கள் அப்படி அல்லர் என்று சொல்லும் உங்கள் வாதம் செல்லாது! செல்லாது!
மற்ற ஆசார்யர்கள் செய்த பொதுவான பாடல்களும், தொண்டுகளும் உண்டு!

இந்த ஆசார்ய பேதாபேதத்துக்கு அடியேன் உடன்பட மாட்டேன்! மீண்டும் மீண்டும் மறுத்துரைப்பேன் என்றும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்! :)

//லிங்காஷ்டகத்தில் 'ப்ரஹ்ம முராரி சுரார்ச்சித லிங்கம் " என்று பாடுகிறாரே , கவனித்தீர்களா ?//

நீங்க சொன்ன அதே லாஜிக் தான்!
இவையெல்லாம் "வெறும்" துதிப் பாடல்கள்! புராண அந்தஸ்து போன்றவை!

மூலமானது வேதம்-ன்னு தானே சொன்னீங்க! அது தானே அத்தாரிடி? பிரம்ம சூத்திரங்களான அதுக்குத் தானே சங்கர பாஷ்யம்? அப்படி மூலமான ஒன்றில் "நாரயண பரோவக்யாத் - நாராயணஹ பரஹ"-ன்னு ஏன் சங்கரர் பாடணும்?
இதுக்கு நேரடியான பதில் சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தவமும், தானமும் தருமமும் நமது இயல்பு. இதில் ஒரு மதப் பிரச்சாரகர் சொல்லி விளங்க வேண்டியது என்ன உள்ளது ?//

//தெரசா ஒரு சர்ச்சைக்கு உட்பட்ட நபர்//

மதப் பிரச்சாரகரா? தொண்டர் இல்லியா? ஹிஹி!
அப்படியே அவர்கள் தொண்டுக்கு இடையே மதப் பிரார்த்தனைகள் செய்தாலும்...
அதே பிரார்த்தனைகள் தான் பிடி அரிசித் திட்டம், அன்னதான முகாம்களிலும் நடக்குது!

தானமும் தருமமும் நமது இயல்பு-ன்னா எதற்கு நம் ஆசார்யர்கள் அத்தனை ஸ்ரீமுகங்கள் கொடுக்கறாங்க ஒவ்வொரு தான தருமத்துக்கும்? அவர்கள் சொல்லி விளங்க வேண்டியது என்ன உள்ளது?

இதற்கு மேல் இங்கு அன்னை தெரேசா அவர்களைப் பற்றிய விவாதங்களை விடுத்து, மூலமான, பதிவுக்குத் தொடர்புடைய விவாதங்கள் மட்டும் செய்வோம்! புரிதலுக்கு நன்றி ஐயா!

Venkatasubramanian said...

////A person can believe saktham faith and follow vishistadvaita concepts./////

I believe you are venturing into hypothetical situations. Saktham is not only based on a symbolic God but also on an associated tantra.

For example, saiva tantra is based on the suddha advaita but has accepted the symbolic and puranic Siva as its God.

Venkatasubramanian said...

///அடியேன் சொல்லவந்தது என்னவென்றால் சங்கரர் ஆறு சமயங்களையும் பாடி விட்டார் என்பதை மட்டும் வைத்து,
"மானுடம் முழுமைக்கும்", அவர் அமைத்து வைத்தார் என்று நீங்கள் சொல்ல முடியாது என்பது தான்!///

மிகச் சரி. இந்த 'மானுடம் முழுமைக்கும்' அடைமொழியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இங்கே ஒப்பு நோக்கு இல்லை என்பதை ஏற்கெனவே கூறி விட்டேன். வள்ளுவரும், 'இந்திரனே சாலும் கரி' , 'எழுமைக்கும் ஏமாப்புடைத்து' போன்ற சொற்றொடர்களால், தன் எழுத்திற்கு பாரத தர்மங்களுக்கே உரித்தாக்கினார்.

Venkatasubramanian said...

////மூலமானது வேதம்-ன்னு தானே சொன்னீங்க! அது தானே அத்தாரிடி? பிரம்ம சூத்திரங்களான அதுக்குத் தானே சங்கர பாஷ்யம்? அப்படி மூலமான ஒன்றில் "நாரயண பரோவக்யாத் - நாராயணஹ பரஹ"-ன்னு ஏன் சங்கரர் பாடணும்?
இதுக்கு நேரடியான பதில் சொல்லுங்க!////

பிரம்ம சூத்திரம் வேதத்தில் இருந்து குறைந்தது நான்கு மகா வாக்கியங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று மட்டும் அறிவேன். பிற சூத்திரங்களை போதாயனரே அளித்தார் என்று படித்திருக்கிறேன்.

சங்கரர் நாராயணனைப் பாடியது அவருடைய சொந்த தேர்வாகவே கருதுகிறேன்.அவர் காளியை பாடியிருந்தாலும் விஷயம் சாதாரணமாகவே நோக்கப்படும். ராமானுஜரோ, மத்வரோ அம்மனைப் புகழ்ந்தால் தான் அது செய்தியாகி விடும்.

தத்துவத்திற்கும் , மதத்திற்கும் இடையே கோடு போடாமல் பேசியதால் சற்று சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. சில கூற்றுகள்
1. இராமானுசர் மதவாதி + தத்துவ வாதி. அப்படியே மத்வரும்.
2. சங்கரர் தத்துவ வாதி. அவருக்கு என்று ஏது மதம் ? இதற்கு நீங்கள் பதில் கூறுங்கள். அவர் நினைத்திருந்தால் , தன் பிறப்பால் வந்த சைவமே தன் சொந்த மதம் என்று அவர் தீர்மானித்திருக்கலாம்.
3. எப்பொழுதாவது சங்கரர் எந்த மதத்தையாவது புகழ்ந்தாரா அல்லது இகழ்ந்தாரா ? அவர் சமணத்தையும் , பௌத்தத்தையும் எதிர்த்தது தர்ம அடிப்படையில் இல்லை ; ஆஸ்திக அடிப்படையில்; அவை இரண்டும் நிரீஸ்வர வாதங்கள் ஆனதால்.

போகட்டும். இதற்கு என்னளவில் ஒரு விடையும் உண்டு.பாவ பக்தி அடிப்படையில் வைணவம் பிற கடவுளரை ஏற்க வாய்ப்பு இல்லை. சுந்தரருக்கு ஈஸ்வரன் நட்பு முறை. சம்பந்தருக்கு தந்தை முறை. அப்பருக்கு ஆசான் முறை. ஆனால் விருந்தாவன வைணவனுக்கு அவன் நாயகன் முறை. ஒரு நாயகிக்கு ஒரு நாயகன் தானே! இதனாலேயே சிவன் அவர்களுக்கு கசப்பு. என்னதான் விசிஷ்டாத்வைதம் ஒரு தத்துவமாக இருந்த போதிலும் ஆசாரியர் வழியே தொண்டன் வழி.

செம்புலப் பெயல் நீர் போல், ஆசாரியர் கூறிய படி, நாராயணனே முழு முதற் கடவுள் என்று தொண்டனும் பறை சாற்றுகிறான்.

Venkatasubramanian said...

//வேங்கடசுப்ரமணியன் ஐயா//
ஐயா எல்லாம் வேண்டாம். 'வெங்கட்' போதுமே))-

//போகிற போக்கில் தங்கள் அனுமானங்கள் பலவற்றைத் தெளித்துச் செல்கிறீர்களே!//

//////காயத்திரி தேவியின் உருவத் துதிகளை நீக்கிவிட்டு (அவை பக்தி காலத்தை சார்ந்தவை) மந்திரங்களை தனியாக வாசிக்கவும். நீங்கள் பக்தி என்ற அடித் தளத்தை விட்டு தனியாக நிற்பதை உணர முடியும்/////

//இதற்கெல்லாம் திவா சார், திராச ஐயா, மெளலி அண்ணா போன்ற பெரியோர்கள் தான் வந்து சொல்ல வேண்டும்!//

கீழே உள்ள இணைப்பில் வேத + புராண சந்த்யா விவரம் உள்ளது

http://vedah.com/org2/literature/pdf_docs/Sandhya_Mantras.pdf

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Venkatasubramanian said...
//வேங்கடசுப்ரமணியன் ஐயா//
ஐயா எல்லாம் வேண்டாம். 'வெங்கட்' போதுமே))-//

சரிங்க வெங்கட் ஐயா! :))
மன்னிக்கவும்! இப்ப தான் இங்கு வர முடிஞ்சுது!

//பிரம்ம சூத்திரம் வேதத்தில் இருந்து குறைந்தது நான்கு மகா வாக்கியங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று மட்டும் அறிவேன். பிற சூத்திரங்களை போதாயனரே அளித்தார் என்று படித்திருக்கிறேன்//

மகா வாக்கியங்கள் நான்கினை மட்டும் கொள்ளவில்லை!
பேத சுருதி, அபேத சுருதி, கடக சுருதி என்று அனைத்தையுமே பிரம்ம சூத்திரம் கொண்டுள்ளது!

//சங்கரர் நாராயணனைப் பாடியது அவருடைய சொந்த தேர்வாகவே கருதுகிறேன்//

நீங்கள் கருதினால் மட்டும் போதாது! :)
அது சங்கரரின் சொந்தத் தேர்வு இல்லை! சங்கரர் ஷண்மத தெய்வங்களைப் போற்றினாலும், பெயர் உருவம் எல்லாம் கடந்த பரப்பிரம்ம விளக்கத்தில், பிரம்ம சூத்திர பாஷ்யத்தில், எதற்கு நாராயண பரம் என்று சொல்ல வேண்டும்? இது ஒன்றும் துதி நூல் அல்லவே! அதற்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லலையே!

//அவர் காளியை பாடியிருந்தாலும் விஷயம் சாதாரணமாகவே நோக்கப்படும். ராமானுஜரோ, மத்வரோ அம்மனைப் புகழ்ந்தால் தான் அது செய்தியாகி விடும்//

தவறு!
அப்படி ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டு விட்டதால் அதுவே உண்மை என்று ஆகி விடாது! அம்பாளைப் புகழ்ந்து, அவள் விழாக்களுக்கு, இவர்களும் சீர் கொடுத்து அனுப்பி உள்ளார்கள்! ஈசனை வலத்தே வைத்து என்று பாடியும் உள்ளார்கள்!

//1. இராமானுசர் மதவாதி + தத்துவ வாதி. அப்படியே மத்வரும்.
2. சங்கரர் தத்துவ வாதி. அவருக்கு என்று ஏது மதம் ? இதற்கு நீங்கள் பதில் கூறுங்கள்.//

இதுவும் தவறே!
சங்கரர் ஏதோ மதங்களுக்கு அப்பாற்பட்டவர்! முழுக்க முழுக்கத் தத்துவவாதி என்றெல்லாம் சொல்லிக்கொள்வதால் ஒரு பயனும் இல்லை! உண்மையும் இல்லை!

சங்கரர் அனைத்து மதங்களையும் போற்றினார்! தத்துவ விசாரமும் செய்தார்! ஆனால் அவருக்கென்று என்ன பிடித்தமானதோ, இஷ்ட தெய்வமோ, அதையே கொண்டாடினார்! அவருக்கு ஏது மதம்-ன்னு கேக்கறீங்களே? அப்புறம் எதுக்கு அவர் விபூதி தரித்துக் கொள்வதும், தினப்படி சந்திர மெளலீஸ்வர பூசை செய்வதும்?

சங்கரரும் மதவாதி + தத்துவ வாதி!

//எப்பொழுதாவது சங்கரர் எந்த மதத்தையாவது புகழ்ந்தாரா அல்லது இகழ்ந்தாரா ?//

அவர் எப்படி இகழவில்லையோ, அதே போல் மற்ற ஆச்சார்யர்களும் எந்தத் தெய்வத்தையும் எந்த மதத்தையும் இகழவில்லை! தத்துவ விவாதம் மட்டுமே செய்தனர்!

சங்கரர் காலத்தில் பிற விசிஷ்டாத்வைத தத்துவங்களோ, துவைத தத்துவங்களோ பரவலாக இல்லை! அதனால் அவர் அவற்றைப் பற்றி விவாதம் செய்யவில்லை! ஆனால் குமரில பட்டர், மண்டன மிஸ்ரர், சரச வாணி கூட எல்லாம் விவாதம் செய்தாரே!

சங்கரர் காலத்தில், மத ஒற்றுமை முக்கியமான தேவை - அதனால் ஆச்சாரியர் பேதம் இல்லாமல் ஷண்மத ஸ்தாபனம் செய்தார்! ஆனால் தன்னளவில் அவர் சைவத்தை விடவில்லை!

இராமானுசர் காலத்தில், பக்தர்கள் சாதி ஏற்றத் தாழ்வு நீக்கல் முக்கியமான தேவை - அதனால் ஆச்சாரியர் சாதி களைந்த ஸ்தாபனம் செய்தார். ஆனால் தன்னளவில் அவர் வைணவத்தை விடவில்லை!

இப்படி இருவருமே சமயவாதி + தத்துவவாதிகள் தான்!
உங்களுக்கு சங்கரரைப் பிடிக்கும் என்றால் தாராளமாக அவரைப் போற்றுங்கள்! ஆனால் அதற்காக அவர் ஒருவர் மட்டுமே "மதம் கடந்தவர்"! அவருக்கு ஏது மதம்? என்று வெறுமனே கூறிக் கொள்வதில் ஒரு பயனும் இல்லை! உண்மையும் இல்லை!

//போகட்டும். இதற்கு என்னளவில் ஒரு விடையும் உண்டு.பாவ பக்தி அடிப்படையில் வைணவம் பிற கடவுளரை ஏற்க வாய்ப்பு இல்லை//
//ஒரு நாயகிக்கு ஒரு நாயகன் தானே!//
//இதனாலேயே சிவன் அவர்களுக்கு கசப்பு//.

இதுவும் தவறு! அத்வைதமும் சங்கரரும் மட்டுமே மதம் "கடந்தவர்" என்ற "உயர் மேம்போக்கு" சிந்தனையால் வந்த போக்கு இது!
ஒன்னு கேக்கறேன்! பதில் சொல்லுங்க!
ஒரு நாயகிக்கு ஒரு நாயகன் - சரி தான்! ஆனால் அந்த நாயகிக்கு மகன், மகள், தோழன், தோழி எல்லாம் இருக்க மாட்டாங்களா?
அந்த மகனாகவோ, தோழனாகவோ மற்ற தெய்வங்களையும் கொள்கிறார்களே! அது உங்க கண்களுக்குத் தெரியலையா?
மதம் கடந்தவர்கள், அத்வைதி என்று சொல்லிக் கொண்டு, மறுபடியும் விபூதி தரித்துக் கொண்டு, மதத்துக்குத் தானே வருகிறீர்கள்?

அத்வைதம், விசிஷ்டாத்வைதம் எல்லாம் வெறும் தத்துவம் மட்டுமே! அது சமயம் இல்லை!
அத்வைதிகள், விசிஷ்டாத்வைதிகள் என்று தனியாக யாருமில்லை!
அவரவர் இஷ்ட தெய்வங்களின் படி, தன்னளவில், சைவம் வைணவம் என்று சமயத்தில் தான் வந்து இறுதியாக நிற்பார்கள்!
அதனால் இல்லாத அத்வைதியைக் காட்டி, ஏதோ அவர்கள் மட்டுமே மதம் கடந்தவர்கள் என்பது உண்மை ஆகாது!

அது அத்வைதியோ, விசிஷ்டாத்வைதியோ...
வழிபாட்டுக்கு அவரவர் சமயம்! விசாரணைக்கு அவரவர் தத்துவம்! - There ends the matter!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

This is from an email conversation that me & my friend had. Thought of posting it here as well for readers' introspection!
------------------------------

Actually there is a complaint on ramanuja by hardcore srivaishnavas,
that he didn’t utter the word “narayana” in sri bashyam, except the invocatory sloka
and referring everywhere as para-brahmam, para-brahmam!
Such is his universal spirit like valluvar, when it comes to a common book. Even sankara addresses “narayana” explicitly in his bhasyam!

So I humbly and strongly disagree that vishitadvaitam = vainavam.
I want to respect the universality that ramanuja maintained.
------------------------------

I understand that u want to talk from a practical perspective…
Fine...But that rule applies to advaitam also, where practically, all advaitis are siva bhakthas at heart!

If you are a siva bhaktha in the inner most, fine, be yourself.
If you call yourself a advaiti, Why dont you call a vishnu bhaktha as vishistadvaithi? Why u wanna call him as vaishnavite?

Take any advaiti and give me!
* What is his principal deity? = chandra mouleeswara!
* What does he sport? = Bhasma! Viboothi!
* What is his principal hymn? = Rudram Chamakam!

Then why fake that "we are all "advaitins" and we dont owe allegiance to any particular deity? All are one to us!?"

No need for faking! There is a clear distinction!
Advaita/Vishitadvaita are philosophies...Not religions!


There is no such religion called advaitam and There are no such ones called advaitis!
Advaitam is just a philosophy!

Shanmatham is NOT a part of Advaitam! It is a religion not a philosophy! A six set grouping of sub-religions done by Sankara!

Just because the same person (Sankara) did both the philosophy & the grouping, doesnt mean advaitham=shanmatham!

Agreed, there should be no bedham & ill talking of other gods!
If saiva folks goto vishnu temples, vaishnava folks come to meenakshi temples as well. The point is nobody should talk ill of anybody. Thatz it.

Just bcoz u goto vishnu temples, dont claim that you are "advaitis" and a class apart! Still u behold lord shiva at heart! why hide it?

If there are two uRchavams one for siva and other for vishnu on the same day at different places, wht wud u choose? The lord in the heart - siva's utsavam, right?

So, There is nothing called "advaiti"!

Advaitam is a philosophy! Saivam is a religion!
Vishistadvaitam is a philosophy! Vainavam is a religion!
Period.

Anonymous said...

Few more points from KRS's Friend :-)

Three Major Philoshopies (just for the sake of simplicity):
Advaitham, VishishAdvaitham and Dvaitham.

Six Religions (just for the sake of simplicity):
Shaivam, Vaishnavam, ShAktham, GAnapathyam, Sauram and KaumAram.

There are plenty of other vedic philoshopies and vedic religions but for the sake of simplicity we are dealing with only the ones mentioned above.

A person could be subscribed to the Advaithic philoshophy and could follow one of the six religion - Majority of this category are following Shaivism; and the next majority vaishnavism and the third majority sAktham. At present gAnapathyam and kaumAram are included into shaivism; Sauram is not followed by anyone - even though people say Sun worship is merged into the rituals like Sandhyavandhanam. So, it is easy for a person subscribing to Advaitham claim they subscribe to all six religions but in reality they subscribe to only one of the religion - all others are subordinate to their main religion.

A person subscribed to vishishtAdvaitham could also be subscribed to any of these six religions. But the fact is almost all of the vishishtAdvaithis are vaishnavaites and so there is a common understanding that vishitadvaitham = vaishnavam. That is correct from the fact that almost all (if not all) vishishtAdvaithins are vaishnavaites; that is not correct from the fact that one is philoshophy and the other is religion. Same can be told of Dvaitham.

Hope KRS will agree to this. And others too. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Welcome KRS's friend :)
Yaaruppa ivaru? :)

//So, it is easy for a person subscribing to Advaitham claim they subscribe to all six religions//

yes!

//but in reality they subscribe to only one of the religion//

yes!

//all others are subordinate to their main religion//

yes!

//A person subscribed to vishishtAdvaitham could also be subscribed to any of these six religions//

yes!

//But the fact is almost all of the vishishtAdvaithis are vaishnavaites and so there is a common understanding that vishitadvaitham = vaishnavam//

yes! "almost"!

//That is correct from the fact that almost all (if not all) vishishtAdvaithins are vaishnavaites;//

No! :)))

//almost all vishishtAdvaithins are vaishnavaites//...let me say "yes" for now!
Now, pl tell me on the same lines, how many advaitins are non-shaivites?
Name atleast 5 people who are advaitins but vainavites.

when you say a blanket statement, that, almost all (if not all) vishishtAdvaithins are vaishnavaites...
you shd also give a reference for the other side of the coin.

So, Name atleast 5 people who are advaitins but staunch vaishnavites or saurites :))

reno85 said...

அருமையான பதிவு....

அருமையான வாதங்கள்...

திரு. கண்ணபிரான் ரவி ஷங்கர் அவர்களுக்கும்

திரு. வேங்கட சுப்ரமணியன்
அவர்களுக்கும்


நன்றி ....

Unknown said...

ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Unknown said...

சனாதன தர்ம ஆசார்யப் பெருமக்கள் குறித்த இந்தப் பதிவில் தெரஸா போன்ற மதமாற்றிகளைக் குறிப்பிடுவதே அபத்தம்!